districts

img

கள்ளச்சாராயம் குறித்து கோவை மாநகர பகுதியில் கண்காணிப்பு - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை பிஆர்எஸ் வளாகத்தில் கோவை மாநகர காவல்துறை கண்காட்சி Expo-2024 காவலர் குடும்பங்களின் விற்பனையங்கள், வங்கிகளின் வீட்டுக் கடன், வங்கிகளின் வீட்டுமனை கடன் கண்காட்சிகள் இலவச யோகா வகுப்புகள் ஆகியவற்றை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதனைத் துவங்கி வைத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது : 

10-க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகள் சேவைகள் குறித்து காவலர் குடும்பத்திற்கு விளக்கம் அளித்தனர். மேலும் இடங்கள் வாங்க,விற்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. காவலர்கள் குடும்பத்தினர் 15 கடைகள் அனைத்து சுயதொழில் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை இங்குக் கண்காட்சியை வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் யோகா பயிற்சி வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். கோவை மாநகர் பொறுத்தவரைக் கள்ளச்சாராயம் புழக்கம் ஏதும் இல்லை இருப்பினும் கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வருகின்றனர்.அவர்களைக் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும் தொடர்ந்து விதியர்களின் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது தனிமைப்படுத்தி அவர்களைக் கண்காணித்து அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் இரவு நேரங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வருபவர்களை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து வருவதாகவும் இதுபோல செயலில் ஈடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறினார். கோவை மாநகரில் போதைக்குள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் போதைப்பொருள் விற்பனை ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

துடியலூரில் போதைப் பொருள் வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே நைஜீரியா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரைக் கைது செய்து இருக்கின்றோம் அது சம்பந்தமாகப் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.  அதில் தொடர்புடைய ஒரு சில நபர்கள் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அது சம்பந்தமாகப் புலன் விசாரணை மேற்கொண்டு சரியான நேரத்தில் அவர்களை நாங்கள் கைது செய்வோம் என்றார்