திருப்பூர், நவ. 21 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வரும் நிலையில் அதைத் தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதையடுத்து கிராம மக்களே ஆடு திருட்டைத் தடுக்கவும், திருடர்களைப் பிடிக் கவும் இரவு நேரம் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா விற்குட்பட்ட காங்கேயம், ஊதியூர், வெள்ள கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கிராமப் புற மக்கள் கால்நடை வளர்ப்பின் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்சமயம் ஆடுகள் சந்தைகளில் ரூ.6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விற்பனையா கின்றன. இந்நிலையில் விவசாய பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளை இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர் கதை யாகி வருகிறது. ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை ஆடுகள் திருடு போனால் ஒரு குடும்பத்தின் பொருளாதா ரமே முடங்கிப் போகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்டுப் பட்டியில் இருந்து 5,10,15 என மொத்தமாக ஆடுகள் திருடப்படுகிறது. இதனால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டிருப்போரின் குடும்பப் பொருளாதா ரமே பாதிக்கப்படைகிறது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் ஆட்டுத் திருட்டைத் தடுக் கவோ, திருடர்களைப் பிடிக்கவோ உரிய கவ னம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இத னால் செய்வதறியாது திகைத்த விவசாயி கள், பட்டி நாய்களை காவலுக்கு வைத்த போதும், நாய்களுக்கு மயக்க மருந்து கொடுத்தோ, சிக்கன் சில்லி வாங்கி நாய்க ளுக்குப் போட்டோ அல்லது காவல் நாய் களை அடித்து கொன்று விட்டு நான்கு சக்கர வாகனத்தில் வைத்து ஆடுகளை திருடி செல் வதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதில் கடந்த வாரம் ஓலப்பாளையம் அருகே 12 ஆடுகளும், ஊதியூர் அருகே 10 ஆடுகளும், பாப்பினி அருகே 11 செம்மறி ஆடுகளும் திருட்டு போனது. காங்கயம் தாலூகா பகுதிகளில் வறட்சியான சூழ்நி லையும், விவசாயம் செய்ய முடியாத நிலை யும் இருப்பதால், அதிகளவில் விவசாயிகள் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றனர். ஊதியூர் பகுதிகளில் அடிக்கடி ஆடு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது பற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்ற னர். இருப்பினும் திருடர்களை பிடிப்பது சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. இதைய டுத்து ஊதியூர் அருகே உள்ள முதலிபாளை யம், வானவராய நல்லூர், அப்பியபாளை யம், கொத்தனூர், புங்கந்துறை, சிறுகிணறு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஆங்காங்கே தாங்களாகவே சோத னைச் சாவடிகள் அமைத்து காவல் காத்து வரு கின்றனர். இரவு முழுவதும் சுழற்சி முறையில் விழித்திருந்து அந்தந்த பகுதிகளில் செல் லும் வாகனங்களை சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர்.
சந்தேகப்படும்படி வாகனங்களில் செல் வோர் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவக் கின்றனர். இளைஞர்கள் இருசக்கர வாகனத் தில் ரோந்து செல்கின்றனர். இந்நிலையில் போலீசாரும் தொடர்ச்சியாக ரோந்துப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கண்கா ணிப்பால் ஆடு திருட்டு சம்பவங்கள் முழுமை யாக கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதே சமயம் கிராமப்புற விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு ஆடுகள் உள்ளிட்ட கால்நடை திருட்டைத் தடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாக தலையிட்டு உரிய பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.