districts

img

சீர்மிகு நகரில் பொதுக்கழிப்பிடங்களின் அவலம்

ஈரோடு மாநகரின் 10 வது வார்டுக்குட்பட்டது செங்கோடம்பாளையம் பள்ளம். தலித் குடியி ருப்பான இங்கு சுமார் 65 குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலனோர் பொதுக்கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு தனியாக பொதுக்க ழிப்பிடம் அமைக்கப்பட்டது. இக்கழிப்பிடம் சிறிது காலம் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் பழுத டைந்தும், பராமரிப்பின்றியும், தண்ணீர் இல்லாம லும் பயன்பாட்டை இழந்து விட்டது. புதர் மண்டி,  மரம் முளைத்து சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால், பெண்கள் பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு திறந்தவெளியில் செல்ல இரவு வரை காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது.  ஸ்மார்ட் சிட்டி என்றும் சீர்மிகு நகரம் என்றும் பெயர் வைத்து பல கோடிகள் வாரி இறைத்து பல் வேறு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், இங்கே இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. சாதாரண கூலி தொழிலா ளர்களான இவர்களுக்கு கழிப்பிடம் அமைக்க வச தியும் இல்லை, அதற்கான இடமும் இல்லை என்கின் றனர். ஆனால் அவர்களுக்குத் தேவையான அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் இருக்கும் கழிப்பிடத்தை பராமரிக்கக் கூட மறுக்கிறது. இதுகுறித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக் கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இருப்பினும், அதிகரிகளோ, மன்ற உறுப்பினர்களோ இக்கோரிக்கைகள் குறித்து  காதில்கூட  போட்டுக்கொள்ளாத நிலையே இருக்கிறது. சமநீதி, சமூக நீதியை உதட்டளவில் பேசி னால் மட்டும் போதாது, உணர்வுப்பூர்வமான செயல் பாட்டில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனை வரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.