districts

img

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், ஆக.14- 76 ஆவது சுதந்திர தினத்தை முன் னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  சார்பில் அரசியல் சட்டத்தைப் பாதுகாப் போம், சமூக நல்லிணக்கத்தைப் பேணு வோம், வெறுப்பை விலக்கி அன்பை விதைப்போம் என்று உறுதிமொழி ஏற் கும் நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற் றது. திருப்பூர் தியாகி குமரன் நினைவகம்  முன்பாக திங்களன்று நடைபெற்ற இந்த  நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் ஒற்றுமை  மேடை திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்  வழக்கறிஞர் பி.மோகன் தலைமை  ஏற்றார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  கே.கனகராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன் திருமுருகன்பூண்டி ஆதீ னம் சுந்தர்ராசஅடிகளார், திராவிடர் கழ கத் தலைவர் யாழ் ஆறுச்சாமி, விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் அ.தமிழ்வேந்தன், மதிமுக நிர் வாகி க.சக்திவேல், திராவிடர் விடுதலை  கழகம் நிர்வாகி முகில் ராசு, ஒருங்கி ணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்ட மைப்பு பொருளாளர் ஜே.முகமது ரபிக்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் நிர் வாகி சண்.முத்துக்குமார், ஷாகின் பாக் போராட்ட குழு தலைவர் அஸ்லம்  இஸ்லாம், அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர் எ.இப்ரா ஹிம் கலீல், திருப்பூர் ஜமாத் அப்துல் கலாம் சபை தலைவர் ஏ.நசீர் அகமத் சிராஜி மற்றும் அனைத்து கிறிஸ்துவ சபை, சன்மார்க்க சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட திர ளான பொதுமக்கள் பங்கேற்றனர். நிறைவாக மோகன் உறுதிமொ ழியை வாசிக்க நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் கைகளை உயர்த்தி மதநல் லிணக்கம் பேணவும், வெறுப்பை விலக்கி அன்பை விதைப்போம் என்றும்  உறுதிமொழி ஏற்றனர்.