districts

img

பகுத்தறிவு பகலவனின் சிந்தனையை கடைபிடிப்போம் தந்தை பெரியாரின் நினைவு தினத்தில் உறுதியேற்பு

கோவை, டிச.24- பகுத்தறிவு பகலவனின் முற் போக்கு சிந்தனையை கடைபிடிப் போம் என தந்தை பெரியாரின் 49 ஆவது  நினைவு தினத்தில் உறுதியேற்கப் பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பிறந்த தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியிலுள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் பெரியார் சிலைக்கு மாலை அனிவித்து, மரியாதை செலுத்தினார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், தமுஎகச மாவட்ட செயலாளர் கரீம், தலைவர் மணி, வழக்கறிஞர் சங்க மாநிலப் பொரு ளாளர் மசேதுங், மாவட்ட  நிர்வாகிகள்  ராமர், கோபால் சங்கர், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது, பெரியார் போராட்டத்தின் மூலமாக செய்த சமூக மாற்றங்கள்,  முற்போக்கு சிந்தனை நடவடிக்கைகள், பகுத்தறிவு சிந்தனை போற்றுவோம் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் மாவட் டம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சி யில் ஏராளமானோர் கலந்து கொண் டனர். பள்ளிபாளையம்  இதேபோல் தந்தை தந்தை பெரி யாரின் 49ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, திராவிடர் விடு தலைக் கழகம் சார்பில் நினைவு தினம்  அனுசரிப்பு நிகழ்வு சனியன்று நடை பெற்றது.  திராவிடர் விடுதலை கழக  மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.