திருப்பூர், ஜூன் 26- திருப்பூர் மாநகராட்சி, நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சார்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை நான் முழுமையாக அறிவேன். தான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடுபத்தினரையும் நண்பர்களை யும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்க ளுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத் திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப் படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட் களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அற்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற்ற உறுதிகூ றுகிறேன் என பள்ளி மாணவ, மாணவியர்கள் போதைப் பழக் கத்திற்கு எதிரான உறுமொழி எடுத்துக்கொண்டார்கள். இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் போதைப்பழக்கத் திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், மாநகர துணை காவல் ஆணையர் கிரிஸ் அசோக் யாதவ், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பக்தவச்சலம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்அ.ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.