districts

img

மகாத்மா காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

தருமபுரி, ஜன.30- மகாத்மா காந்தி நினைவு தினமான ஞாயிறன்று சமூக நல்லிணக்க மேடையின் சார்பில் தருமபுரியில் உள்ள காந்தி  சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மகாத்மா காந்தி, மதவெறியன் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜன.30 ஆம் தேதியன்று மதவெறி எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரியில் சமூக நல்லிணக்கமேடை சார் பில் மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சுபேதார் தலைமை வகித்தார்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், நகர செயலா ளர் ஆர்.ஜோதிபாசு, சிறுபான்மை நலக்குழு மாவட்ட செய லாளர் ஜேசுதாஸ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சாதிக்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.