திருப்பூர், பிப்.26- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக ஆத்துப் பாளையத்தில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத் துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை மாநகராட்சி அதி காரிகள் பார்வையிட்டனர். ஆத்துப்பாளையம் பகுதியில் மாநில, மாவட்ட அளவில் கபடிப் போட்டிகளில் பங் கேற்ற வீரர்கள் நிறைந்துள்ளனர். இப்பகுதி யில் உள்ள விளையாட்டு வீரர்கள் பல ஆண்டு களாக விளையாட்டு மைதானம் அமைத்து தரக் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், மண்டல அலுவலகத்திலும் மனு அளித்துள்ள னர். இதுதொடர்பாக நிர்வாகம் எந்த நடவ டிக்கையும் எடுக்காததால், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் சாலையில் கபடி விளையாடும் போராட்டம் நடத்த கடந்த மாதம் முற்பட்டனர். அப்போது, மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் கோரிக்கை விரை வில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே கோரிக்கை வலியுறுத்தினர். இந்நிலை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக சனி யன்று மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டனர். வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் உடன் இருந்தார்.