கோவை, மே 3– கோவை மத்திய சிறை யில் கைதிகளுக்குள் அடிக் கடி மோதல் நடைபெறுவ தாகவும், பீடி, சிகரெட், செல் போன் புழக்கங்கள் அதி கரிப்பு போன்ற காரணங்களால் டிரோன் கேமிராவை பயன் படுத்தி கண்காணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் 1,850 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்கில் கைதான கைதிகள் சிலரும் இங்கே உயர் பாது காப்பிற்காக அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோவை சிறையில் கைதிகள் சிலர் அத்துமீறி நடப்பதாக வும், சிறை அலுவலர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருவதா கவும் கூறப்படுகிறது. மேலும், சிறை வளாகத்தில் பீடி, சிகரெட் மற்றும் செல்போன்களும் அதிகளவில் பயன்படுத் தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த சிறை அதிகாரி கள் முடிவு செய்து கூடுதல் கண்காணிப்பிற்கு டிரோன் கேமிரா என்ற ஆளில்லாத பறக்கும் கேமிராவை வாங்கி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் கோவை, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்பட 9 சிறைகளுக்கும் டிரோன் கேமிரா வாங்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.