கோவை, ஜூலை 22– கோவை மாநகராட்சியில் பொது இடங்கள், அரசு அலுவ லக கட்டிடம், மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரை பொலிவு படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உட்கட்ட மைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகரில் உள்ள குளக்கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையின் அழகைக் கெடுக்கும் வித மாக கோவை மாநகரில் உள்ள மேம்பால தூண்களிலோ அல்லது அரசு அலுவலகங்களின் சுவர்களிலோ விளம்பரங் கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என்று கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள் ளார். இந்த உத்தரவை மீறினால் சம்மந்தப்பட்ட நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப் புகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் வழக் குகள் பதிவு செய்யப்படும் என எச்சரக்கை விடுத்துள்ளார்.