திருவனந்தபுரம், நவ.23- மக்களை திசைதிருப்பும் முயற்சிகளின் உள்நோக் கத்தை அம்பலப்படுத்த சமூகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் பி.கோவிந்தப்பிள்ளை யின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பி.ஜி. கலாச்சார மையத்தை சனியன்று துவக்கி வைத்த பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: வகுப்பு வாத அமைப்பினர் பல்வேறு வகையில் புகுந்து விடுகிறார்கள். இதை புரிந்துகொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். மறுமலர்ச்சியின் மதிப்பீடுக ளுக்கு எதிரான சக்திகள் எல்லா காலத்திலும் சமூகத்தில் செயல்பாட்டு வந்துள்ளன. ஆனால், அத்தகைய செயல்பாடுகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கிடைத்ததில்லை. மறுமலர்ச்சி விழு மியங்களில் நம்பிக்கை நாடு முழுவதும் பரவியது. ஒரு கட்டத்தில் அதில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த நேரத்தில் மறுமலர்ச்சிக்கு எதிரான சக்திகள் சில பகுதிகளில் கொஞ்சம் புகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளை சாதிப்பெயரால் அடை யாளப்படுத்த வேண்டும் என மூத்தவர்கள் கருதும் நிலை ஏற்பட்டது. சாதியத்தின் பெயரால் அடை யாளப்படுத்த வேண்டாம் என கருதும் சமூகத்தில் இத்கைய சில சிந்தனைகள் ஏற்பட்டுள்ளன.
மறுமலர்ச்சியின் மதிப்பீடுகளுக்காக தன்னை நிறைநிறுத்திக் கொண்ட பி.ஜியின் கொடைகள் மறக்க முடியாதவை. கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகளில் முன்னிலை வகித்தார். எப்போதும் மார்க்சிய வழி யில் சிந்தித்த அவர் தொடாத துறைகள் இல்லை. எந்த சந்தேகத்துக்கும் விடைதரும் அதிகார பூர்வமான கலைக் களஞ்சியமாக விளங்கினார். நூலக இயக்கத்திலும், முற்போக்கு கலை இலக்கி யத்திலும் மகத்தான பங்களிப்பை பி.ஜி. அளித்துள் ளார் என கூறினார். மறுமலர்ச்சி தொடர்பாக பி.கோவிந்தப்பிள்ளை எழுதிய நான்கு புத்தகங்களை முதல்வர் வெளி யிட்டார். அவற்றை டாக்டர் ராஜன் குருக்கள் பெற்றுக் கொண்டார். பாளையம் அய்யன்காளி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பி.ஜி.கலாச்சார மையத் தின் தலைவர் டாக்டர்.கே.என் பணிக்கர் தலைமை வகித்தார். அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்டோர் பேசினர்.