districts

img

பில்லூர் அணை 3 ஆவது முறை நிரம்பியது!

மேட்டுப்பாளையம், ஜூலை 27- பில்லூர் அணை நடப்பாண்டில் மட் டும் இதுவரை 3 முறை நிரம்பியுள்ள  நிலையில், கோவை மற்றும் திருப்பூர்  மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட் டுக்கு தீர்வு கிடைந்துள்ளதாக பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக - கேரள மாநில எல்லையோ ரம் அடர்ந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின், நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக 100 அடி நீர்தேக்க  உயரம் கொண்ட அணை கடந்த ஜூன்  27 ஆம் தேதியன்று நிரம்பியது. அடுத்த தாக ஜூலை 16 ஆம் தேதியன்றும், ஜூலை 26 ஆம் தேதியன்றும் அணை யின் நீர் நிரம்பி வழிந்து, அதன் உபரி நீர் (20 ஆயிரம் கனஅடி) வெளியேற்றப் பட்டது. அணைக்கான நீர்வரத்து குறை யாததால் சனியன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நிரம்பி அதன் உப ரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணை கடந்த  2022 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2023  ஆம் ஆண்டு ஒரு முறை கூட நிரம் பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சனியன்று 2 ஆவது நாளாக அணையில் இருந்து விநாடிக்கு  12 ஆயிரம் உபரி நீர் அதன் நான்கு  மதகுகள் வழியாக பவானியாற்றில் திறந்துவிடப்பட்டு வருவதால் மாவட்ட  நிர்வாகம் சார்பில் பவானிக்கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ளி யன்று விடுக்கப்பட்ட வெள்ள ஆபாய எச்சரிக்கை சனியன்றும் தொடர்கிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ள பில்லூர் அணை இந் தாண்டு இதுவரை மூன்று முறை நிரம் பியுள்ளது. கடந்த சில மாதங்களாக இப் பகுதியில் நிலவி வந்த குடிநீர் தட்டுப் பாட்டு பிரச்சனைக்கு தற்போது தீர்வு  கிடைந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பில்லூர் அணை நிரம்பி அணை யில் இருந்து பவானியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் நேரிடையாக பவா னிசாகர் அணையை சென்றடையும் என் பதால் அந்த அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.