தருமபுரி, ஜன.18- பழுதடைந்த ஈச்சம்பள்ளம் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் அரசு பேருந்தை மறித்து மறி யலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், எர்ரபையனஅள்ளி அருகே உள்ள ஈச்சம்பள்ளம் கிரா மத்திற்கு செல்லும் சாலை குண் டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இச்சாலையை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். இச்சாலை அமைத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகி றது. சில ஆண்டுகளுக்கு முன்பு பழு தடைந்த இச்சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி சாலையில் தண்ணீர் நிற்கும் அவலம் தொடர்கிறது. நான்கு சக் கர வாகனம் சென்றால் புழுதிகள் பறக்கிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி மக்கள் அதிகாரிக ளிடம் மனு அளித்தனர். ஆனால், நட வடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக அப் பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ள னர். இந்நிலையில், ஈச்சம்பள்ளம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை மறித்து சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது, 3 மாதத்திற்குள் சாலை சீரமைக்கப் படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுமக்கள் மறி யலை கைவிட்டு, அனைவரும் அங் கிருந்து கலைந்து சென்றனர்.