districts

img

மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பப்பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தக்கோரி எம்.பி.யிடம் மனு

சேலம், நவ.17- மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி, நாடாளுமன்றத்தில் பேசக்கோரி  சேலம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சிஐடியு-வினர் மனு அளித்தனர். அகில இந்திய சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சாலை போக்குவரத்து தொழி லாளர்களின் பிரச்சனை குறித்து பிர தமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகன திருத்த சட்டம் – 2019யை திரும் பப்பெற வேண்டும். மோட்டார் தொழி லாளர்களின் வாழ்வாதார தேவைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண் டும் என வலியுறுத்தி, அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந் தித்து மனு அளிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதியிடம், சனியன்று சாலை  போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலை மையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.  அந்த மனுவில், தனியார் நிதி நிறுவ னங்களின் பிடியிலிருந்து விடுபட, தேசியமயமாக்கப்பட்ட நிதி நிறுவனங் கள் மூலம் கடன் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியாற் றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என  அனைவருக்கும் இஎஸ்ஐ, பிஎப் சட் டங்களை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. இந்நிகழ்வில், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் முருகேசன், செந்தில் குமார், உதயகுமார், மோகன்ராஜ், சீனி வாசன், மூர்த்தி, ஈஸ்வரன், செல்வம், சர வணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.