districts

img

வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூன் 25- கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கே.புதூர் காட்டுவளவு கிராம மக்கள் திங்களன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. சாந்தியிடம் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கெண்டையனஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது கே.புதூர்  காட்டுவளவு. இப்பகுதியில் வசித்து வரும் பல்வேறு சமூகத்தி னரும், நிலமற்ற ஏழைகளவார்கள். கூலி வேலை செய்து  தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே, இப் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து சமூக மக்களுக்கும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.