திருப்பூர் ஜூன் 20- கால்வாய் நீர் குளம்போல் தேங்கி குடியிருக்க முடியாத அளவிற்கு தலித் குடியிருப்பு பகுதியில் சரி செய்து கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் சார்பாக மனு. பொங்கலூர் ஒன்றியம் அழகுமலை பஞ்சாயத்துக் குட்பட்ட இராமம்பாளையம் தலித் குடியிருப்பு பகுதியில் மழை நீர் மற்றும் கால்வாய் நீர் குளம்போல் தேங்கி நின்று குடியிருக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாய் உள் ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பொங்கலூர் வட் டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன் றிய செயலாளர் சுந்தரம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சிவசாமி கலந்து கொண்டனர்.