ஈரோடு, ஜன.1- ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்து முறை யிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 ஆவது மாவட்ட மாநாடு கடந்த டிச.15,16 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஈரோடு மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற் காக தோண்டப்பட்ட சாலைகளை உடன டியாக செப்பனிட்டு தார்சாலை அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு போன்றவற்றிக்காக ஒப்பந்த தாரர்கள் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பெறுவதை தடுக்க வேண்டும். பெரும் பள்ளம் ஓடையையொட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய முறையில் மருத்துவர் கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களை நிய மிக்கவும், தேவையான மருத்துவ உப கரணங்களை நிறுவிட வேண்டும். ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் வசிக் கும் மலையாளி பிரிவைச் சார்ந்த மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சத்தி வட்டம் உக்கரம் பகுதியில் நூல கம் கட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.கே.ரங்கராஜன் நிதி ஒதுக்கீடு செய் தும் நூலகம் அமைக்கும் பணி தொடங்காமல் உள்ளது. இதற்கான தடைகளை களைந்து விரைவில் கட்டுமான பணிகளை தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணணுன்னியை, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ப.மாரிமுத்து, சி.பரமசிவம், ஏ.எம்.முனு சாமி, எஸ்.சுப்ரமணியன், சி.முருகேசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஆ.சகாதே வன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.