districts

img

பட்டா வகைமாற்றம் செய்யக்கோரி மனு

அவிநாசி, மே 24- பட்டா வகைமாற்றம் செய்யக்கோரி அவிநாசி வட்டாட்சி யர் அலுவலகத்தில் மங்கரசவலையபாளையம் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், மங்கரசவலை யபாளையம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு 1992  மற்றும் 1997 ஆம் ஆண்டில் அரசு சார்பில் வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது. இந்நிலமானது வருவாய் பதிவேட்டில் நத் தம் இடமாகவே இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் சொந்த குடும்பத்தை சேர்ந்தவர்க ளுக்கு கூட பாகப்பிரிவினை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், வீடு கட்ட கடன் உதவி பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. எனவே, பட்டா வகைமாற்றம் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச் சியில் மனு அளித்தனர்.