districts

img

தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி  ஆகியோரிடம் மனு

பட்டியலின மக்களை தொழில் முனைவோராக்க தமிழக அரசால் 1996 ஆம் ஆண்டு ஈரோடு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.203. 80 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 200 தொழில் கூடங்கள் இதுவரையிலும் செயல்படுத்தாமல் இருப் பதை விரைவாக செயல்படுத்த வேண்டும் எனக்கோரி வியாழனன்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி  ஆகியோரிடம் மனு வழங்கி வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஏ.லாசர், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்த லிங்கம், பொருளாளர் சங்கர், சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி ஆகியோர் உடனி ருந்தனர்.