ஈரோடு, ஏப்.4- உக்கரம் அண்ணாநகர் அருந் ததியர் மக்களுக்கு சாதிய ஆதிக்க சக்தியினர் இழைத்து வரும் தீண்டாமைக் கொடுமை கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோபி வருவாய் கோட் டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி வட்டம், உக்கிரப் அண்ணாநகர் பகுதியில் ஓட்டல் கடையில் தலித் மக்களை பெஞ்சில் அமர வைத்து உணவருந்த அனுமதிப்பதில்லை டீக்கடையில் தனி டம்ளர் முறை, சலூன் கடையில் பட்டியலின மக்க ளுக்கு முடிதிருத்தம் செய்வ தில்லை போன்றவற்றை தட்டி கேட்டதற்காக சாதிய ஆதிக்க சக்தியினர் தலித் மக்களை ஊர் புறக்கணிப்பு செய்துள்ளார்கள். இதன்காரணமாக மேற்படி அண்ணா நகரைச் சேர்ந்த தலித் மக்களுக்கு அப்பகுதி ஆதிக்க சாதியினரால் வேலை மறுக்கப் பட்டு வருகிறது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தலித் மக்கள் வேலை இல்லாமல் பசி யால் வாடி வருகிறார். குறிப்பாக, குழந்தைகள், பெண்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி யில் பதட்டமான சூழல் நிலவி வரு கிறது. ஆகவே, தீண்டாமை நோக்கத் துடன் செயல்பட்டு வரும் சாதிய ஆதிக்க சக்தியினர் மீது கோட் டாட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலித் மக்க ளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத் திட வேண்டும். அதுவரை ரேசன் கடையில் தேவையான அத்தியா வசிய பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை தொடர்ச்சியாக வழங் கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோபி வருவாய் கோட்டாட்சிய ரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இம்மனுவினை தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பி.பி.பழனிச்சாமி, ஆர்.ரகுராம், ஏ.எம்.முனுசாமி, எம் அண்ணாதுரை, இரா.திருத்தணிகாசலம்,கே.எம். விஜயகுமார், பி.வாசுதேவன், க.ரங்கசாமி, ர.குமாரசாமி, செல்வன், திராவிடர் கழகத்தின் சார்பாக சிவலிங்கம், நம்பியூர் சென்னியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிறுத்தை வள்ளுவன், மாணிக் கம், பெரிய காளையன், பூபதி ராஜா, செந்தமிழ் செல்வன், இராமன், பட்டான், குருநாதன், ஆதித் தமிழர் பேரவை சார்பாக பொன்னுசாமி, ராஜன், தமிழ்புலி கள் சார்பாக அப்துல்லா, தம்பி, தமிழ் சிறுத்தைகள் சார்பாக இரா.குணசேகரன், சு.சேதுபதி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் சார்பாக இரா.குருசாமி ஆகியோர்கள் அளித்தனர். இம்மனுவினை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.