districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அடிப்படை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் மனு

உதகை, டிச.10 வடவயல் பகுதியைச் சேர்ந்த பனியர் பழங்குடியினர் கிரா மத்தில் குடியிருப்புகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத் தில், கூடலூர் அருகே உள்ள வடவயல் கிராமத்தை சேர்ந்த  பனியர் பழங்குடியின மக்கள் அளித்த மனுவில், தங்களது  கிராமத்தில் பனியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு  வீடுகள் இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் குடியிருப்புகள் மற் றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் வீடுகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

யானை துரத்தியதில் 4 பேர் படுகாயம்

 கோவை, டிச.10- வால்பாறையில் யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம டைந்தார். மேலும் யானை விரட்டியதில், அச்சத்தில் ஓடிய தொழிலாளர்கள் 3 பேர் தவறி விழுந்து காயமடைந்தனர். கோவை மாவட்டம், வால்பாறையில் செவ்வாயன்று அதி காலை சுமார் 1 மணி அளவில் மானாம்பள்ளி வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை குடியிருப்புக்கு அருகில் வரும் சத்தம் கேட்டு சரோஜினி (52)  என்பவர் வீட்டின் கதவை திறந்து வெளியில் வரும்பொழுது காட்டு யானை தாக்கி கீழே விழுந்ததில் முகத்தில் சிராய்ப்பு காயங்களும் வலது கணுக்காலில் எலும்பு முறிவும் ஏற்பட் டது. மேலும், அங்கு  கூடியிருந்த தொழிலாளர்கள் மிரண்டு ஓடும்போது தவறி விழுந்து உதயகுமார் (32), சந்திரன் (62), கார்த்தீஸ்வரி (40) ஆகியோருக்கும் சிராய்ப்பு காயம் ஏற்பட் டுள்ளது. உடனே காயம் அடைந்த நபர்களை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் மனித விலங்கு  மோதல் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.