districts

img

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தலித் மக்கள் மனு

தருமபுரி, ஜன.8- மொரப்பூர் உள்வரு வாய் வட்ட கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மக் கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.  தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப் பூர் உள்வட்டம் டாக்டர் அண்ணல் நகர், கலை ஞர் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு சொந்த விவசாய நிலம் இல்லை, வீட்டுமனை இல்லை, தின வேலை  செய்து வருகின்றனர். இவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என நீண்ட காலமாக கேட்டு வருகின்றனர்.  இந்நிலையில் மொரப்பூர் வருவாய் வட்டத்திற்குபட்ட மொரப்பூர் ஆதிதிராவிடர் கிராமநத்தம் புல எண் 57/1-பி,சதுரபுற பரப்பு 061.5,தீர்வை 0.94,நிலம் 1991ஆம் ஆண்டு  ஆதிதிராவிடர்களுக்கென ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிர மிப்பு செய்துயுள்ளனர். மேலும் ராசலம் பட்டி கிராம புல எண் 39/17-பி ல் இலவச  வீட்டுமனை பட்டா வழங்க இடம் உள்ளது.  ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு இலவச  வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.