தருமபுரி, பிப்.21- தடங்கம் அம்பேத்கர் நகரில் ஒகேனக்கல் குடிநீர் வழங் கக்கோரி அப்பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது அம்பேத்கர் நகர். இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். நூறுநாள் வேலையை நம்பி வாழ்க்கையை நகர்த்தி வரும் இப்பகுதி மக்களுக்கு, அடிப் படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, ஒகேனக்கல் குடிநீர் விநியோகிக்கப்படாததால், குடிநீரை விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சா யத்து மூலம் வரும் உப்பு நீர் வீட்டு உபயோகங்களுக்கு செலவிடுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தடங்கம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித் தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அம்பேத்கர் நகரில் தடையின்றி ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.