பட்டமளிப்பு விழாவிற்கு குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி: கண்டனம்
சேலம், ஜூன் 29- சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் குறிப்பிட்ட செய்தி நிறுவ னங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் பட்டது. இதற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் புதனன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் கலந்து கொள் கிறார் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அடையாள அட்டை வழங்க பெரியார் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத் திருந்தது. இதையடுத்து செய்தியாளர்கள் பெரியார் பல்கலைக்கழத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்தில், தங்களது அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் நிகழ்ச்சியன்று ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் செய்தியாளர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியை செய்தி சேகரிப்பதற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இச் செயல் மற்ற செய்தியாளர்களை அவமானப் படுத்தும் செயலாகும். இது மிகவும் கண்டிக் கதக்கது என தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறப்பு
தாராபுரம், ஜூன் 29 - தாராபுரம் வசந்தம் நகரில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்ட டத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த வேளாண்மை விரி வாக்க மையம் புதிய கட்டட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஆகி யோர் தொடங்கி வைத்தார்கள். வேளாண்மை உதவி இயக்குநர் கே.லீலா வதி வரவேற்றார். திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வேளாண்மை துறை செயற் பொறியாளர் ஜெயக்குமார் கூறியதாவது, தாராபுரத்தில் வேளாண்மை துறை, தோட் டக்கலை துறை மற்றும் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தமிழக அரசு விவசாயம் சார்ந்த அனைத்து துறை களும் ஒரே இடத்தில் செயல்பட கூடிய வகை யில், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கு புதிய கட்டடம் கட்டியுள்ளது மகிழ்ச்சிய ளிக்கிறது என கூறினார். தாராபுரம் நகராட்சி பகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டித்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது. திறப்பு விழாவின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நகராட்சி கவுன் சிலர்கள் சீனிவாசன், மொரட்டாண்டி மற்றும் வேளாண்மை விரிவாக்க உதவி அலுவ லர்கள், தோட்டகலை உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
கோவை, ஜூன் 29- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல் அருகில் நிறுத்தப்பட்ட வாக னங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண் டனர். பக்ரீத் பண்டிகை வியா ழனன்று கொண்டாடப்பட்ட நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற் கொள்கின்றனர். இந்நிலையில், கோவை யில் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிவாசல்கள் அருகே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நவீன கருவிகளால் சோதனை மேற்கொண்டனர்.
தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி
உடுமலை, ஜூன் 29- உடுமலையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில், சப் ஜூனியர் பிரிவில் அமராவதி சைனிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமரா வதி நகர் பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங் கும், சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் தென்னிந்திய அள விலான கால்பந்து போட்டி, கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ பயிற்சி பள்ளிகள் கலந்து கொண்டன. இந்நிலையில், வியாழனன்று சப் - ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டியில் உடுமலை அமராவதி சைனிக் பள்ளி யும், ஆந்திரா சைனிக் பள்ளியும் மோதின. பரபரப்பான ஆட் டத்தில் 2:1 என்ற கோல் வித்தியாசத்தில் உடுமலை அமரா வதி சைனிக் பள்ளி அணி அபார வெற்றி பெற்றது. இதேபோல ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆந்திரா சைனிக் பள்ளி அணியும், கேரளா சைனிக் பள்ளியும் மோதியதில், கேரளா அணி 5:1 வித்தியாசத்தில் ஆந்திரா அணியை தோற்கடித்தது அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி முதல்வரும், இந்தியன் நேவி கேப்டனான மணிகண்டன் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர். பரி சளிப்பு விழாவில் அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு நடை பெற்றது.
துப்பாக்கி முனையில் கடத்தல்; கைது
சேலம், ஜூன் 29- புதுக்கோட்டையைச் சேர்ந்த துணிக்கடை உரிமையா ளரை துப்பாக்கி முனையில் கடத்தி வந்த நபரை ஏற்காடு காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, துத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் காம ராஜ் (32). இவர் அதேபகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் கார்மென்ட்ஸ் உரிமையாளர் ரவி என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச் சனை இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.10 லட்சம் நிலுவை யில் இருப்பதாகவும், நிலுவைத்தொகையை திருப்பி செலுத் தாமல் வேறு ஒருவரிடம் காமராஜ் துணிகள் வாங்கி விற்பதாக, கார்மென்ட்ஸ் உரிமையாளர் ரவிக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திமடைந்த ரவி, கூலிப்படை யைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் மூலம் காமராஜை கடத்தி அவரிடமிருந்து வசூலிக்கும் பணத்தில் சரிபாதியாக பிரித்து கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இருவரும் கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று காமராஜை துப்பாக்கி முனை யில் கடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து காமராஜின் உறவினர் கொடுத்த புகா ரின்பேரில், திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். அப்போது, காமராஜின் செல்போன் ஏற்காடு டவர் பகுதியில் தெரிவதாக, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காமராஜ் தேடி ஏற்காடு போலீசார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு தங்கும் விடுதியில் காமராஜ் அடைத்து வைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காமராஜை மீட்டு, அவரை கடத்தி வந்ததாக கூறப்படும் முஸ்தபா மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வியாழனன்று காலை ஏற்காடு ரவுண்டானா பகுதியிலுள்ள உணவகத்தில் நின்று கொண்டிருந்த முஸ்தபா உள்ளிட்ட அவ ரது நண்பர்களை, ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் குணசேக ரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதன்பின், இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சியிலிருந்து வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் ஜஸ்டின் மற்றும் திருவை ராஜ் உள்ளிட்ட போலீசாரிடம் கைது செய்யப்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
முட்புதரிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்பு
அன்னூர், ஜூன் 29- அன்னூர் அருகே முட்புதரிலிருந்து, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த கரியாம்பாளை யத்தில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள முட்புதர் ஒன்றில் வியாழனன்று அதிகாலை குழந்தை அழும் சப்தம் கேட்பதாக பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன்பின் அங்கிருந்த பொதுமக்கள் உத வியுடன் புதர்களை அகற்றி பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை முட்காயங்களுடன் இருந்தது. உடனடியாக அந்த குழந்தையை மீட்ட ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவம னையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரி சோதித்த போது, பெண் குழந்தை எடை குறைவாக இருந்தது தெரியவந்தது. இருப்பினும் குழந்தை ஆரோக்கியமாக இருப் பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந் தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குப்பை தேக்கம்
கோவை, ஜூன் 29- கோவை, வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகு திக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிக் கடைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அப்பகுதி யில் மீன்கழிவு, முட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் சாலை யோரத்தில் குவித்து வைக் கப்பட்டுள்ளன. வனவிலங்கு களான பன்றி, சிறுத்தை உள் ளிட்டவைகள் குப்பைகளை கிளறி, அதிலுள்ள கழிவு களை தின்பதற்காக வருவ தால் அப்பகுதியை துர்நாற் றம் வீசி வருகிறது. அதோடு மட்டுமின்றி அங்கு வரும் சுற் றுலா பயணிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது.