districts

img

ஜல்லிபட்டியில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி வாலிபர் சங்கத்தினர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

உடுமலை, அக்.26 - உடுமலை ஜல்லிபட்டி ஊராட்சியில்  குடிநீர் பிரச்சனை உள்பட பொதுமக்க ளின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி  செய்யாமல் திட்டமிட்டுப் புறக்கணிக் கும் ஊராட்சி நிர்வாகத்தை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் வியாழக்கிழமை காலிக்குடங்க ளுடன் ஜல்லிபட்டி நால் ரோடு பகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் மாசானி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி பகுதியில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்தும் வகை யில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும்.  ஊராட்சி பகுதியில் இருக் கும் குடிநீர் பிரச்சனைக்கு போர்க்கால  அடிப்படையில் தீர்வு காண வேண்டும். புதுக்காலனி மற்றும் வெங்கடேசா காலனியில் பகுதியில் அடிப்படை வச திகளை மேற்கொள்ள வேண்டும். ஊராக வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கடந்த  இரண்டு மாதங்களாக கூலி வழங்கப்ப டாமல் உள்ளது. அதை உடனடியாக தர  வேண்டும். ஊராட்சியில் காலனிப்பகுதி யில் அமைக்கப்பட்ட சாக்கடைகளில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியிருப் பதால் தெற்று நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே கழிவுநீரை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை விளக்கி  சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் குமரகுரு, அஜித்குமார், மாதர் சங் கத்தின் கஸ்தூரி, விவசாய தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரங்க ராஜ், சிஐடியு மாவட்ட துணைச்செயலா ளர் ஜெகதீசன், சிஐடியு கட்டுமான சங் கத்தின் தாலூக்கா செயலாளர் கி.கன கராஜ் ஆகியோர் பேசினர். திரளானோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.