districts

img

வெள்ளலூர் குப்பைகிடங்கு அருகில் நிரந்தர தீயணைப்பு வாகனம் நிறுத்தம்

கோவை, பிப்.7- வெள்ளலூர் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடிப்பதால் 24 மணி நேர மும் கண்காணித்து செயல்பட நிரந்தர தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட் டுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர்  பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள  100 வார்டுகளில் தினமும் சேகரமா கும் 800 டன் குப்பைகள் இங்கு கொட் டப்படுகின்றன. அடிக்கடி குப்பை களில் தீ பிடித்து, கரும்புகை சூழ்வ தால் இங்குள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளா கின்றனர். இதனால் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாக னம் நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில், கடந்த வாரம் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து குப்பைக் கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரம் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள் ளது. இந்த வாகனத்தில் தீயணைப்பு  வீரர்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பார்கள். இதன்மூலம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற் படும்போது உடனடியாக அதனை கட் டுக்குள் கொண்டுவர முடியும் என்ப தால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந் துள்ளனர்.