சேலம், பிப். 13- தமிழ்நாடு அரசு, பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து 4 நாட்கள் ஆகி யும் பல்கலை கழக பதிவாளரை இது வரை பணியிடை நீக்கம் செய்யாத நிலையில், இது குறித்து ஆட்சி மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகையில், அரசின் உத்தரவை செயல்ப டுத்த முடியாது என பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் ஆணவத்தோடு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி பேரவைக் குழு கூட்டம் செவ்வாயன்று நடை பெறுவதாக துணைவேந்தர் அறிவிப்பு வெளி யிட்டு இருந்தார். இந்த கூட்டம் நடைபெறும் பொழுதே பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆட்சி மன்றக் குழு உறுப்பினருக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் பெரியார் பல் கலை கழக ஆட்சி பேரவைக் குழு கூட்டம் கூட்ட அரங்கில் துணை வேந்தர் ஜெகநா தன் தலைமையில் துவங்கியது. இந்த பேரவைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு கல்லூரி முதல்வர்கள், பேராசி ரியர்கள் பலரும் பேசுகையில், பெரியார் பல் கலை கழக பதிவாளர் தங்கவேலுவை பணி யிடை நீக்கம் செய்திட தமிழ்நாடு அரசு பரிந் துரை செய்த பின்னரும், இதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்யாமல், அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்ததற்கு எதிர்ப்பு தெரி வித்தனர். மேலும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் தேர்தலை அவசர அவசரமாக நடத்த வேண் டிய அவசியம் என்ன என்றும், பொருளே இல்லாமல் ஆட்சி பேரவை கூட்டம் நடத்தி டுவதற்கும் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடாமல் இருப்பதற் கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் பதில் அளிக்க மறுத்தத் தோடு, ஆசிரியர்களின் தொடர்ச்சியான கேள் விக்கு பின்னர், அரசின் உத்தரவை செயல்ப டுத்த முடியாது என்றும், மைனாரிட்டியாக உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் துணைவேந்தர் பேசினார்.
துணைவேந்தரின் இந்த பேச்சை கண் டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற் றும் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆகிய இரு சங்கங்களை கொண்ட கூட்டமைப்பை சேர்ந்த ஆட்சி பேரவைக் குழு உறுப்பினர் கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்ட அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தன்னிச்சை யாக செயல்படும் துணைவேந்தரை கண்டித் தும், அவசர கதியில் தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்படுத்தும் வகையில் நடத் துகின்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் கூட்ட அரங்கிற்குள் சென்ற அரசு கல்லூரி ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தன்னிச்சையாக செயல்ப டும் துணைவேந்தரை கண்டித்தும் முழக்கங் கள் எழுப்பியபடி கூட்ட அரங்கிற்கு சென்ற னர். அப்போது துணைவேந்தருக்கும் ஆசிரி யர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. இதனை செய்தி சேகரிப்பதற்காக செய்தி யாளர்கள் சென்றபோது, துணைவேந்தர் ஜெகநாதன் செய்தியாளர்களை கூட்ட அரங்கே விட்டு வெளியே தள்ளி கதவை மூடியது மட்டுமல்லாமல், செய்தியாளர் களை அப்புறப்படுத்த காவல்துறையை அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. ஆசிரியர்களின் தொடர்பு போராட்டத்தை தொடர்ந்து, பேரவை கூட்டம் மாலை 4 மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு துணைவேந்தர் கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்றார். மேலும் தேர்தலை நடத்திடவும் உத்தரவிட்டார். துணைவேந்த ரின் இந்த உத்தரவை கண்டித்து தேர்தல் நடைபெறும் அறை முன்பு அரசு ஆசிரியர் கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு நிலவியது.