சேலம், பிப்.6- துணைவேந்தரின் அனுமதி இன்றி வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தல் அல்லது தங்களது பெயரில் கடிதம் எழுதக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சர்ச்சையை ஏற்படுத்தும் சுற்றறிக்கை வெளியீட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே யுள்ள சேலம் பெரியார் பல்கலைக்க ழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் கள், பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்களுக்கு பல்கலைக்கழக பதிவா ளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். இதில் கடந்த காலங்க ளில் புத்தகங்கள் வெளியீடு செய்து இருந்தால் அது சம்பந்தமாக நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதா, இல் லையா, ஆம் எனில் அதன் நகல் கொடுக்க வேண்டும், இல்லை என் றால் ஏன் பெறப்பட வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அப்படி வெளியிட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, புத்தகங்களின் தலைப்பு, புத்தகங்கள் வெளியீடு செய்தவரின் முகவரி, பதிக்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, காப்பு ரிமை பெற்று இருந்தால் அதன் விப ரம் கொடுக்க வேண்டும், புத்தகங் கள் வெளியீடு செய்ததன் பணப்ப லன் உள்ளிட்டவைகளை வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும் என்று பெரியார் பல்க லைக்கழக பதிவாளர் சுற்றறி கையை வெளியிட்டுள்ளார். மேலும், எந்த ஒரு பணியாளரும் துணைவேந்தரின் அனுமதியின்றி பத்திரிக்கை மற்றும் செய்தி ஊட கங்களுக்கு பிரசுரங்களை எடிட்டிங் அல்லது பதிவேற்றம் செய்வதோ, சமூக ஊடகங்கள் நடத்தும் நிகழ்ச் சியில் பங்கேற்கவோ கூடாது என் றும், துணைவேந்தரின் அனுமதி இன்றி வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தல் அல்லது தங்களது பெயரில் கடிதம் எழுதவும் கூடாது எனவும் சுற்றறிக்கை வெளியிட்டுள் ளது. இது பெரியார் பல்கலைகழக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் இதழி யல் துறை இணைப் பேராசிரியரான இரா.சுப்பிரமணி, அங்குள்ள கலை ஞர் ஆய்வு மய்யத்தின் இயக்குந ராகவும் பொறுப்பு வகித்து வருகி றார். சமீபத்தில், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல் வித்துறை நியமித்தது. தந்தை பெரி யாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய `பெரியாரின் போர்க்க ளங்கள்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது. தொடர்ந்து, ஏற்கெனவே இவர் எழுதிய `மெக் காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூலின் மறுபதிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரி யர் இரா.சுப்பிரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாச்சார தன் மையுடைய விவகாரங்களுக்கு, எந்த வித முன் அனுமதியும் பெறத் தேவை யில்லை என்ற விதி உள்ளது. ஆனால், பெரியார் குறித்த புத்தகம் எழுதிய தற்காக பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது சர்ச் சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், பல்கலைக்கழக நிர்வா கத்திற்கு கண்டனம் தெரிவித்திருந் தனர். இந்நிலையில், மீண்டும் சர்ச் ்சையை ஏற்படுத்தும் வகையில் இச் சுற்றரிக்கை பதிவாளர் அனுப்பியுள் ளது குறிப்பிடத்தக்கது.