districts

பெரம்பலூர் சிறுமி தற்கொலை விவகாரம் நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது

சேலம், நவ.18- பெரம்பலூரைச் சேர்ந்த சிறுமியை  கடத்தி, கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை சித்திரவதைக்கு உள்ளாக் கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு  மார்க்சிஸ்ட் கட்சியுடன் சிறுமியை பெற்றோரு டன் நடத்தி போராட்டம் முடிவுக்கு வந்தது. பெரம்பலூர் சிறுமியின் பெற்றோர்க ளோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்களுடன் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், சேலம் டவுன் உதவி ஆணையர் வெங்கடேன் ஆகியோர் சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு  அலுவலகத்தில்  நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் சம்பந்தப்பட்ட நான்கு  குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்து விட்டோம் என்றும்,  மேலும் சம்பந்தப்பட்ட கைகளத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்தி ரன் மீது நடவடிக்கை எடுப்பது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்  தருவதற்கு அரசு மட்டத்தில் பேசுவது என காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பேசி முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வெள்ளியன்று  உடற்கூறு  ஆய்வு செய்திட ஒப்புக்கொள்ளப் பட்டது. அதன் அடிப்படையில் உடற்கூறு செய்து உடலை பெற்று நல்லடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், மாநகர செயலாளர் மேற்கு செயலா ளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலா ளர் என்.பிரவீன் குமார், வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் ஜெகநாதன், வழக்கறிஞர் எம். வெற்றிவேல், சிறுமியின் பெற்றோர், உற வினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவல் துறையின் சார்பாக சேலம் டவுன் உதவி ஆணையர் வெங்கடேசன், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடரா ஜன், சங்கர் உள்ளிட்ட காவல்துறை குழு வினர் பங்கேற்றனர். இதனிடையே, சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த மணிகண்டன் மற்றும் அவ ரது தந்தை ராமசாமி, தாயார் ராணி, உறவி னர் மாரிமுத்து ஆகிய நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனை யடுத்து, பெரம்பலூர் சிறுமியின் உடல்  உடற் கூறு ஆய்வுக்குப் பின்பு இறுதி நிகழ்ச்சிக் காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப் பட்டது. முன்னதாக அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா சிறுமியின் உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னார். இதில் வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார், மாணவர் சங்க மாவட்ட செய லாளர் பவித்ரன் மற்றும் சிறுமியின் குடும் பத்தினர் இருந்தனர்.