அவிநாசி,ஜன.16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில், மக்கள் ஒற்றுமை பொங்கல் விளை யாட்டு விழா, நிகழ்ச்சிகள் திங்களன்று நடை பெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் மக் கள் ஒற்றுமை விழாவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், அவிநாசி நகரம், முத்துசெட்டி பாளையம், வடுகபாளையம் உள்ளிட்ட இடங் களில் சாக்குப்போட்டி, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. முத்து செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள், மாவட்ட செய லாளர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப் பினர் நவநீதன், ஒன்றிய குழு உறுப்பினர் தங்க ராஜ், மாணவர் மன்ற நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவிநாசி நகரப் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர்
மணிகண்டன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றிய தலை வர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர் தேவி, வடுகபாளையம் பகுதியில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமசாமி, முன்னாள் உறுப்பினர் கௌரி மணி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் மல்லப்பன், வடுகபாளை யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் இயக்குநர் ராஜ், வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் பொன்னுச்சாமி, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் செட்டிபாளையம், தோட்டத்துபாளை யம், ஆத்துப்பாளையம், காளிபாளைய ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 15 ஆம் தேதி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட் டது. இந்நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலை வர் காளியப்பன், முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் எ.சிகாமணி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நிருபன் சக்க ரவர்த்தி,
வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் ரேவந்த் குமார், ஒன்றிய செய லாளர் சந்தோஷ், மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வசந்தி, ஒன்றிய செயலாளர் பானு மதி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் பாண்டியன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை உடுமலை பகுதியில் ஞாயிறன்று வாலிபர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்க ளுக்கு என அனைத்து தரப்பு மக்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த 37 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சிவசக்தி கால னியிலும், குரல்குட்டை, பள்ளபாளையம், மலையாண்டி கவுண்டனூர் மற்றும் சாளை யூர் பகுதிகளில் மக்கள் ஒற்றுமை விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகி றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிங் காரவேலன், மாவட்டத் தலைவர் அருள், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், வாலிபர் சங்க நிர்வாகிகள் தமிழ்தென்றல், ராமசாமி, கருப்புசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.