அவிநாசி, அக்.10 - வேலாயுதம்பாளையம் ஊராட்சி கருணைபாளையம் சாலையை சீர மைக்கக் கோரி பொதுமக்கள் அவிநாசி மங்கலம் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பா ளையம் ஊராட்சி பெரிய கருணைபா ளையம், சின்ன கருணைபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தும், பெரிய கருணைபாளையம், சின்னக் கருணைபாளையம் சாலை புதுப்பா ளையம் சாலைகள் மிகவும் பழுத டைந்து மழைக்காலங்களில் குண் டும் குழிகளில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக் கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர் கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். இச்சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத் திரமடைந்த பொதுமக்கள் அவி நாசி மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல றிந்த அவிநாசி போலீசார், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் இந்த சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன், விவசாய சங்கத் தலைவர் முத்துரத்தினம், விசைத்தறி சங்க நிர்வாகி முத்துராயப் பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ராயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.