districts

img

எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்ட மக்கள்

கோவை, ஜன.29- கோவை அருகே ஆன்லைன் எம்எல்எம் நிறுவனத்திற்கு ஆதர வாக சுமார் 5000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் திரண்டதால் நீலாம்பூர் - மதுக்கரை புறவழி சாலையில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. கோவையை தலைமையிட மாக கொண்டு My v3 Ads என்ற செயலி செயல்பட்டு வருகிறது. மேலும், யூ டியூப் சமூக வலைத ளத்தில் இந்த செயலியின் சேன லும் இயங்கி வருகிறது. இதில்  தினமும் 2 மணி நேரம் விளம்ப ரம் பார்ப்பதன் மூலமும், புதிய  நபர்களை சேர்ப்பதன் மூலமும்  அதிக வருமானம் பார்க்கலாம் என  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ360 முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள  பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடி யும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய்  வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் செலுத்தும் பணத்திற்கு  ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய  நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு  தனியாக பணம் வழங்கப்ப டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதனை நம்பி ஆயிரக்க ணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக ணக்கானோர் இதில் உறுப்பினர்க ளாக இருக்கின்றனர். முதலீட்டா ளர்களுக்கு கூறியபடி அந்நிறுவ னம் மாதம் மாதம் பணம் வழங்கி  வருகிறது. இந்நிலையில் மருத்து வர்களின் பரிந்துரையின்றி மாத்தி ரைகளை வழங்குவது சட்டத்திற்கு  புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வரு மானம் பார்க்கலாம் என ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கோவை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார்.  இந்த புகாரின் பேரில் அந்நி றுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், அந்த நிறு வனத்திற்கு ஆதரவாக கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள  புறவழிச்சாலையில் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறு வனம் எந்த மோசடியும் செய்ய வில்லை எனவும், தவறான புகார்  கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை யடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய தீர்வை எடுப்ப தாக கோட்டாச்சியர் உறுதிய ளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.