ஈரோடு, அக்.27- அந்தியூர் அருகே பட்டியலின மக்க ளுக்கு சாலையை பயன்படுத்த அனு மதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அப் பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், பட்லூர் கிராமம், முத்துகவுண்டன் புதூர் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை, தனி நபர் ஒருவர் பட்டா நிலம் எனக்கூறி இயந்திரங்கள் மூலம் குழி தோண்டியுள்ளார். இத னால், பாதை இல்லாத பகுதியாக முத் துக்கவுண்டன்புதூர் பட்டியலின குடி யிருப்பு மாறியுள்ளது. இதனால், பாதிக் கப்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் தலைமையில் காத்திருக்கும் போராட்டமாக மாறிய நிலையில், வட் டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையி னர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எதிர்தரப்பும் பேச்சுவார்த் தைக்கு அழைக்கப்பட்டனர். ஆயினும் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சாலை பயன்பாடு அம்மக்களுக்கு உறுதி செய்யப்படவில்லை. அத்துடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் திங்களன்று (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத் திருந்தவர்களை களைந்து போகச் செய் தனர். இவ்வாறு ஊரில் இருந்து வெளியே செல்ல பொதுப்பாதை கேட்டு வட்டாட்சி யர் அலுவலகம் காத்திருக்கும் போராட் டம் நடத்தியும் தீர்வு ஏற்படாததால் வீடு தோறும் ஞாயிறன்று கருப்புக்கொடி ஏற் றினர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.