செங்கல்பட்டு, அக்.9- மோடி ஆட்சியில் மக்கள் அனை வரும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்று த்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநில 4 ஆவது மாநாடு கடந்த மாதம் நடை பெற்றது. இம்மாநாட்டுப் பணிகளை செய்த வரவேற்பு குழுவினருக்கு பாராட்டு மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் வரவேற்பு குழுத் தலைவர் ப.சு. பாரதி அண்ணா தலைமையில் சனிக் கிழமை (அக்.8) நடைபெற்றது. இதில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, தமிழகத்தில் நமது அமைப்பு தான் மாற்றுத்திறனாளிகள் மனதில் இடம் பிடித்த அமைப்பு. மாற்றுத் திறனா ளிகளை திரட்டுவது மிகவும் கடினம் அது நம்மால் மட்டுமே முடிந்தது. மாற்றுத் திறனாளிகளுக்காக பல அமைப்புகள் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கான முதன்மையான அமைப்பு நமது அமைப்பு மட்டுமே. மாநாட்டில் கலந்து கொண்ட முதல் வர் அறிவிப்புகளை அறிவிப்பார் என்ப தற்காக மட்டும் நாம் அவரை அழைக்கவில்லை. அது நமது வழியும் அல்ல. நமது கோரிக்கைகளை நாம் தான் போராடிப் பெறவேண்டும். திட்டமிட்டால் அதை செய்து முடிக்கும் பலமும் நம்பிக்கையும் நம்மிடம் உள்ளது
உழைப்பு சுரண்டல்
தொழிலாளர்களும் தொழிற் சாலைகளும் பன்னாட்டு முதலீட்டா ளர்களும் நிறைந்த மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. அதே வகையில் தொழிலாளர்களிடம் இருந்து உழைப்பை சுரண்டும் மாவட்டமாக வும் மாறியுள்ளது. தமிழகம் முழு வதும் இருந்து சுமார் 5 லட்சம் தொழிலா ளர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பன்னாட்டு தொழிற்சாலையில் பணி செய்து வருகின்றனர் அந்த தொழிலா ளர்கள் மத்தியில் நமது சங்கத்தின் இய க்கத்தையும் வலுப்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு நிறைந்த மாவட் டம். தொழிலாளர்கள் மத்தியில் இயக்க மாக வலுமிக்க வீறுகொண்ட மாவட்ட மாக மாற வேண்டும். அதே அதே வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் பாடுகளை மக்கள் மத்தியில் தோலு ரித்துக் காட்ட வேண்டிய கட்டாயமும் நம்மிடம் உள்ளது.
அதிகரிக்கும் வேலையின்மை
பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உள்ளது. வேலைவாய்ப்பும் இல்லை. பட்டம் படித்த பல இளைஞர் கள் வேலை இல்லாமல் சாலையில் நிற்கின்றனர். உயர் படிப்பு படித்த வர்கள் 5 ஆயிரத்திற்கும் 10 ஆயிரத் ்திற்கும் பணி செய்கின்றனர். உழைக்கும் மக்களின் சட்டப்படியான சலுகைகளை ஒன்றிய அரசு படிப்படியாக பறித்து வருகிறது மோடி அரசு. இந்த நிலையில் மக்கள் அச்சத்து டன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனித சங்கிலி இயக்கத்தை வலுவாக நடத்துவோம்
மசூதி, தேவாலயங்களில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் நுழைந்து மோதலை ஏற்படுத்த போகின்றனர். இவர்களை எதிர்த்து களமாட வேண்டிய தேவை நம் முன்னே ஏற்பட்டு ள்ளது. இந்த சூழ்நிலையில் வருகின்ற 11ம் தேதி நடைபெறுகின்ற மனித சங்கிலி போராட்டத்தை வலுவான முறையில் நடத்த வேண்டிய அவசியம் நம்முன்னே ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாற்றத்திற னாளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சிராணி, மாநிலத் தலைவர் டி.வில்சன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எ.அறுமுக நயினார், வரவேற்குழு செயலாளர் இ.சங்கர், வரவேற்பு குழு பொருளாளர் வி.அரிகிருஷ்ணன், சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தாட்சாயினி, மாவட்டத் தலைவர் எம்.வெள்ளிகண்ணன், ஆகியோர் பேசினர்.