சேலம், பிப்.17- ஒன்றிய மோடி அரசின் தவறான பொரு ளாதார கொள்கையின் விளைவாக, கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பொது மக்களை கடும் துயரத்திற்கு தள்ளிய ஒன்றிய அரசைக் கண்டித்து சேலத்தில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக இந்திய நாட்டின் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சொல்லண்ணா துய ரத்தை அடைந்து வருகின்றனர். வேலை யின்மை தலைவிரித்து ஆடுகிறது. பொதுத் துறை மற்றும் அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயம், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் சனி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன மாநில துணைத்தலை வர் எஸ்.ஏ.ராஜேந்திரன், அகில இந்திய காப் பீட்டு ஊழியர் சங்கத் தலைவர் தர்மலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் செல்வம், சுகாதார ஊழியர் சங்க நிர்வாகி கள் சண்முகம், முருகப்பெருமாள், அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.