districts

img

பொங்கல் விழா நடத்த பாதுகாப்பு கேட்டு மக்கள் மனு

தருமபுரி, ஜன.4- பொங்கல் திருவிழா நடத்த பாது காப்பு வழங்க வேண்டும் எனக்கோரி குண்டாங்காடு பொதுமக்கள் பாலக் கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குண்டாங்காடு கிராமத் தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் குண்டாங்காடு கிராமத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து திரு விழா நடப்பது வழக்கம். இதில் சில நபர்கள் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில், சில ஆண்டுகளாக வீண் தக ராறு மற்றும் அடிதடியில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு களை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், ஒரு தரப்பினர் திருவிழாவை நடத்தக் கூடாது என்றும், அப்படி மீறி நடைபெ றும் நிலையில் எது வேண்டுமானலும் நடக்கும் என மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த முறை பொங்கல் திரு விழாவை நடத்த உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பாலக்கோடு வட்டாட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.