districts

img

தூய்மைக்கான மக்கள் இயக்கம்

கோவை, ஜூன் 10- கோவை, செட்டிபாளையம் பேரூராட்சியில், நகரங் களின்  தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்  ஓராண்டு நிறைவு  விழா நடைபெற்றது.  இதனையடுத்து, செட்டிபாளையம் பேரூராட்சி தலை வர், துணைத்தலைவர், செயல் அலுவலர், வார்டு உறுப்பி னர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணி யாளர்கள் பங்கேற்ற உறுதி மொழியேற்பு நிகழ்வு நடை பெற்றது. மேலும், இந்நிகழ்வின் ஒருபகுதியாக, ஒருங்கினைந்த தூய்மை பணி, மரம் நடுதல், அனுமதியற்ற விளம்பர பதாகை கள் அகற்றுதல் மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை களை தரம் பிரித்து கொடுத்த இல்லத்தரசிகளுக்கு மற்றும்  தூய்மை பணியினை சிறப்பாக செய்த பணியாளர்களுக்கு  பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.