districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருப்பூர், ஏப்.1- டெல்லியில் ஏப்ரல் 5ஆம் தேதி  நடைபெறவிருக்கும் தொழி லாளர்கள் பேரணியை விளக்கும் வகையில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் சார்பில் புதிய பேருந்து நிலையத் தில் சனியன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர்  சங்கம், அகில இந்திய பிஎஸ்என் எல் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து  தில்லியில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள தொழி லாளர்கள் பேரணியை விளக்கியும்,  பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு 4ஜி மற்றும் 5ஜி வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி யும்  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.  தமிழ்நாடு பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்க ராதாகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு  இயக்கத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர்  மற்றும் பிஎஸ்என்எல் திருப்பூர் கிளைச் செயலாளர் குமர வேல் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்நிகழ் வில், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கோவை  மாவட்ட தலைவர் சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க கிளைச் செயலாளர் சங்கிலி துறை உட்பட திரளா னோர் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். முடிவில் தமிழ்நாடு  தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப் பாளர் ரமேஷ்  நன்றி கூறி இயக்கத்தை முடித்து வைத் தார்.