districts

img

உடுமலையில் மக்கள் சந்திப்பு இயக்கம்

உடுமலை, ஜூலை 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக் குழு சார்பில் செவ்வாயன்று 9/6 செக்போஸ்ட் பகுதியில் தொடங்கி எலையமுத்தூர் பகுதி வரை மக்கள் சந்திப்பு இயக் கம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர் எம். முருகவேல் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்தில், ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை நிறுவனங் களை தனியார் நிறுவனங்களுக்கு விற்க கூடாது. கிராமப்புற  மக்களின் நலன் காக்கும் ஊராக வேலை திட்டத்திற்கு கூடுதல்  நிதி ஒதுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உயர்த்த பட்ட  மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதம் ஒரு  முறை மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண் டும். உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக காலை முதல் விற் பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மக்கள் சந்திப்பு  இயக்கத்தில் வலியுறுத்தபட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  ராஜகோபால், ஜெக தீசன், அருண்பிரகாஷ், ராமசாமி, தமிழ்தென்றல் மற்றும் வாலிபர் சங்கத்தின் கருப்புசாமி, மாசாணி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டார்கள்.