திருப்பூர், ஜன.18- தொடர் விடுமுறை நாட்களையும் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவ காச நாட்களாக மின் வாரிய கருதுவதா தல், அதிகமான அபராதம் கட்ட வேண் டிய சூழல் உள்ளதாக பொதுமக்கள் குற் றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் மின் கட்டணம் கணக்கி டப்பட்டு 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராத தொகையுடன் சேர்த்து செலுத்த வேண்டும். இந்நிலையில், பொங்கல் திருவிழாவையொட்டி 4 நாட்களுக்கு அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. இந்த நாட்களும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமாக மின் வாரியம் கருதுகி றதா? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப் பியுள்ளனர். இதுகுறித்து, மின் கட்டணம் செலுத்த வந்தவர் கூறுகையில், சென்ற வாரம் தான் எங்களுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் பொங்கல் விடுமுறை வந்ததால் மின் கட்டணம் செலுத்த முடிய வில்லை. இதையடுத்து, வியாழனன்று மின் கட்டணம் செலுத்த மின் அலுவல கத்திற்கு வந்தால் அபராதமும் சேர்ந்து செலுத்த வேண்டும் என்கிறார்கள். ரூ.450 மின் கட்டணம் கணக்கிடப்பட்டி ருந்தது. இந்நிலையில் அபராத தொகை யுடன் சேர்த்து ரூ.600 செலுத்த வேண்டும் என்கிறார்கள். இது போன்ற தொடர் விடுமுறை நாட்களையும் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாச காலமாக மின் வாரியம் கருதுகிறதா என்று தெரியவில்லை. ஏற்கனவே மின் கட் டண உயர்வு, அதுபோக ஜிஎஸ்டி உள் ளிட்ட சேவை வரிகளுடன் சேர்த்து மின் கட்டணம் தாறுமாறாக உள்ள நிலை யில், இது போன்று அபராதமும் வசூலித் தாள் நாங்கள் என்ன செய்வது. தொடர் விடுமுறை நாட்கள் வரும் பட்சத்தில், மின் கட்டணம் செலுத்த கூடுதல் நாட் கள் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.