districts

img

கலைஞர் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளையொட்டி கோவையில் அமைதி பேரணி

கலைஞர் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளையொட்டி கோவையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில், தமிழ் நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்து சாமி தலைமை ஏற்றார். காந்திபுரம் அண்ணாசிலை அருகில்  வைக்கப்பட்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்  படத்திற்கு மலர்மாலை அணிவித்துப் புகழ் அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில், கோவை மாநகர் மாவட்டத் திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு  மாவட்ட  திமுக  செயலாளர்  தொ.அ. ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.