districts

img

சித்தா பிரிவில் மருந்துகள் தட்டுப்பாடு

கோவை, பிப்.17- கோவை அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்துகளை  வெளியில் வாங்கிக் கொள்ள மருத்து வர்கள் அறிவுறுத்துவதால், நோயா ளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவின் கீழ் சித்தா, ஆயுர்வே தம், யோக சிகிச்சை முறைகள் அளிக் கப்படுகின்றன. மற்ற பிரிவுகள் போல சித்தா பிரிவிலும் புற நோயாளிகளாக வும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சளி, தோல் நோய், மூலம், சர்க்கரை உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சித்தா பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகி றது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்த பின் ஆங் கில மருத்துவத்தை காட்டிலும் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத் துவ சிகிச்சை முறைகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க தொடங்கி யுள்ளனர். இதனால் சித்தா, ஆயுர் வேதம் உள்ளிட்ட இயற்கை சிகிச்சை களுக்கான மருந்துகளின் தேவை அதி கரித்துள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை சித்தா  சிகிச்சைப் பிரிவில் ஒரு சில மருந்து களுக்கு தட்டுப்பாடும், ஒரு சில மருந்து கள் முற்றிலுமாக இல்லாத நிலையும் காணப்படுகிறது. இதனால், நோயாளி களை வெளி மருந்தகங்களில் வாங்கிக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர். ஒரு சில கஷாய பொடிகளுக் கும் பற்றாக்குறை இருப்பதாக நோயா ளிகள் தெரிவிக்கின்றனர்.  இதுதொடர்பாக அரசு மருத்துவ மனை சித்தா பிரிவு மருத்துவர்கள் கூறு கையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா உள்ளிட்ட இயற்கை மருத்துவப் பிரிவு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாடு அரசும் போதிய அளவு மருந்து களை வழங்குகிறது. ஒரு சில நேரங்க ளில் மருந்துகள் வருவதற்கு காலதாம தம் ஏற்படுவதால் தட்டுப்பாடு ஏற்படு கிறது. நோயாளிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வெளியில் வாங் கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.  சித்தா பிரிவுகளில் கூடிய வரையில் போதிய மருந்துகள் இருப்பு வைப்பதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது, என்றனர்.