districts

சொந்த ஊரில் வாக்களிக்கச் செல்ல திருப்பூரில் கூடுதல் பேருந்து, ரயில் இல்லாததால் பயணிகள் அவதி

திருப்பூர், ஏப்.20– திருப்பூரில் இருந்து ஓட்டுப் போட சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்துகள், ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் பய ணம் செய்ய முடியாமல் கடும் அவ திக்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளியன்று நடைபெற் றது. 100 சதவிகிதம் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு விடுமுறை அறி வித்தது. வியாழக்கிழமை திருப் பூரில் பணியாற்றும் தொழிலாளர் கள் சொந்த ஊருக்குச் செல்ல காலை முதலே பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் குவிந்தனர்.  இங்கு பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏரா ளமானோர் தங்கள் சொந்த ஊர்க ளுக்கு சென்று வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.  ஆனால் அங்கு போதிய பேருந்து கள் இயக்கப்படாததால், பேருந்து களைச் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திருவண்ணாம லைக்குச் செல்ல போதிய பேருந்து கள் இல்லை எனக்கூறி மத்திய  பேருந்து நிலையத்தில் பொதுமக் கள், பேருந்துகளை செல்லவிடா மல் வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர், நடத்துநர்க ளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். குறைந்த அளவே பேருந்துகள்  இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மூச்சு விடக்கூட இடமில்லாமல் மிகுந்த நெருக்கடியில் பயணிக் கும் நிலை ஏற்பட்டது. அதேபோல், பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெளி யூர் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையம் முன்பு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தேர்தல் நாளான வெள்ளியன்று வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என்றும் வரக்கூடிய வெளி யூர் பேருந்துகள் பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் வந்து நிற்காமல் செல்வதாகவும் கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வாக்குப்பதிவு நாளில் திருப்பூர் ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை யில் காத்திருந்து பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்கிச் சென்றனர். அதிகளவில் பயணிகள் திரண்ட தால் இங்கும் கூட்ட நெரிசல் ஏற் பட்டது. இந்நிலையில், வாக்களிக் கச்சென்றவர்கள் திரும்பி திருப்பூர் வருகிறபோது இதேபோன்று நெருக்கடியான நிலை ஏற்பட்டு விடக்கூடாது. பல்வேறு மாவட்டங் களில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக கூடு தல் சிறப்பு பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.