சேலம், டிச.23- அரசு உதவி பெறும் பள்ளி மூடப்போவதாக தகவல் வெளி யான நிலையில், அப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை யிட்டனர். சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவி பெறும் ஸ்ரீராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், திடீரென பள்ளியை மூட உள்ள தாக வெளியான செய்தியை அறிந்த மாணவர்களின் பெற் றோர்கள் திங்களன்று பள்ளியை முற்றுகையிட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியினை தொடர்ந்து நடத்துவது குறித்தும், மாணவர்களின் கல்வி நலன் பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப் பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.