பள்ளிபாளையம், மே 6- பரமத்தி வேலூரில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு கூட்டம் சனியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், மணியனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் சங்க நிர்வாகி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், திருச்செங் கோடு தாலுகா செயலாளர் ஆர்.சக்திவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். புதிய கிளைத் தலைவராக குணசேகரன், துணைத் தலை வராக சரவணன், செயலாளராக மாது, துணைச் செயலாள ராக குப்புசாமி, பொருளாளராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.