உடுமலை, ஆக.7 - திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி இரண்டாம் மண்டல பாசனத்திற்கு 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க திட்டக்குழு கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு திரு மூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சம்பந்தமாக திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழுவின் தலைவர் மற்றும் குழு உறுப்பி னர்களின் கலந்தாய்வு கூட்டம் செவ்வா யன்று, பொள்ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் முருகேசன் முன்னிலையில் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்த கொண்டனர்.பரம் பிக்குளம் ஆழியாறு திட்ட தொகுப்பு அணை களில் தென்மேற்கு பருவமழையின் காரண மாக நீர் அளவு நல்ல நிலையில் உள்ளது. ஆனால் திருமூர்த்தி அணையைத் தவிர மற்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள் ளது. இதை கருத்தில் கொண்டு ஆக.19ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாம் மண்டலப் பாசனத்திற்கு 120 நாட்களில் உரிய இடை வெளி விட்டு நான்கு சுற்றுக்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இரண் டாம் மண்டல பாசன காலத்தில் பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்ட தொகுப்பு அணைக ளுக்கு அதிக நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு இருந்தால் மேலும் கூடுதலாக ஒரு சுற்று தண் ணீர் வழங்கலாம் எனவும் முடிவு செய்யப் பட்டது. பின்னர், மூன்றாம் மண்டலப் பாசனத் திற்கும் அடுத்ததாக 4 சுற்று தண்ணீர் வழங்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்க ளால் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள் ளது.