districts

பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு, ஜன.29- ஈரோடு மாவட்டத்தின் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, பாண்டி யாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டு 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்  ஆதாரமாக பவானிசாகர் அணை  விளங்கி வருகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. பவானிசாகர் அணை யில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் பரப் பளவிலான விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. அதுமட்டுமின்றி அத்திக் கடவு - அவினாசி திட்டமும் பவானி ஆற் றின் தண்ணீரை நம்பியே அமைக்கப் பட்டுள்ளது. இதனால் தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பாண்டியாறு - மாயாறு  இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என பல ஆண்டு களாக பல்வேறு ஊரைச் சார்ந்த பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக பல் வேறு இயக்கங்களும், பல்வேறு மனுக் களும் தற்போதும் வரை அளித்து வரு கின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட் டத்தில், வருங்காலங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டு மெனில், பாண்டியாறு - மாயாறு திட் டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு அளுக் குளி, பொலவக்காலிபாளையம், ராஜன் நகர், கொமராபாளையம், காரப்பாடி, மாதம்பாளையம், விண்ணப்பள்ளி, காவிலிப்பாளையம், பவானி, பெரிய புலியூர் உள்பட 20- க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.