திருப்பூர், மே 27 – திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இடுவாய் கே.கணேசன், செயலாளர் கணக்கம்பாளையம் சண்முகசுந்த ரம் உள்ளிட்ட நிர்வாகிகள் சனியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தா.கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம், திருப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி தலைவர் கூட்டமைப்பின் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மனு அளித்தனர். இம்மனுவைப் பெற்றுக் பெற்றுக் கொண்டு, விரைவில் ஊராட்சி கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.