districts

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்ட எதிரொலி

கோவை, பிப்.7- துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை  ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத ஊராட்சிச்  செயலரை மாற்றக் கோரி வார்டு உறுப்பி னர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்ட நிலையில், சின்ன தடாகம் ஊராட் சிக்கு செயலாளர் மாற்றப்பட்டார்.  கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூர், தாளியூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர் ஆகிய  கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் குடியிருந்து வருகின்றனர். இந்த  ஊராட்சியில் தலைவராக ரத்தினம்  பி.எஸ்.எம் மருதாசலம், துணைத்தலை வராக அருள்குமார் உட்பட 15 ஊராட்சி  வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி செயலாளராக செழியன் என்ப வர் உள்ளார்.  இந்த நிலையில், ஊராட்சி செய லர் செழியன் தன்னிச்சையாக முடிவு  எடுக்கிறார். அரசு திட்டங்களை உறுப்பி னர்களுக்கு தெரிவிப்பதில்லை. இத னால் திட்டங்கள் முறையாக பொது மக்களுக்கு சென்றடைவதில்லை. தங்கள் வார்டுகளுக்கு பணிகள் எதை யும் ஒதுக்குவது இல்லை. அரசால் அறிவிக்கப்பட்டும் நலத்திட்டங்கள் மற் றும் முகாம்கள் குறித்து எந்த வித தக வல்களும் தெரிவிப்பதில்லை எனக்கூறி ஊராட்சித் துணைத் தலைவர் அருள் குமார் தலைமையில் 10 வார்டு உறுப் பினர்கள் புதனன்று பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. தகவல் அறிந்து வந்த பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார  வளர்ச்சி அலுவலர் ஜென்கின்ஸ் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் ஊராட்சி செய லரை மாற்றினால் மட்டுமே போராட் டத்தை கைவிடுவோம் என வார்டு உறுப் பினர்கள் உறுதிபட தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளி டம் பேசினார். பின்னர், ஊராட்சி செய லாளர் செழியனை சின்னதடாகம் ஊராட்சிக்கு பணி மாறுதல் அளித் தும், சோமையம்பாளையம் ஊராட்சி செயலாளர் கார்த்திக் பன்னிமடை பொறுப்புச் செயலாளராக மாற்றி வட் டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட் டுள்ளார்.