districts

img

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா

தருமபுரி, ஆக.21- இண்டமங்கலம் ஊராட்சியில், முறை கேடு செய்த ஊராட்சிமன்றத் தலைவர், செய லாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினர் கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் இண்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இரண்டு  பெண் வார்டு உறுப் பினர்கள் உள்ளோம். ஊராட்சிமன்றத் தலை வரும், செயலாளரும், கடந்த ஒரு வருடமாக ஊராட்சிமன்ற கூட்டத்தை நடத்துவதில்லை, எதற்கும் எங்களுக்கு தகவலும் அளிப்ப தில்லை. ஆனால், கூட்டம் நடைபெற்றதாக வும் பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, எங்களின் இருவரின் கையெப்பத்தை ஊராட்சிமன்ற செயலாளர் சரவணன் போட்டுள்ளார்.  இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட் டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சி செயலாளர் சரவணன் ஏற்கனவே முக்குளம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத் தில் முறைகேடு செய்து நடவடிக்கை எடுக் கப்பட்டது. தற்போது எங்கள் ஊராட்சியிலும் போலியான கையெப்பமிட்டு முறைகேடு செய்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைய டுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனு  கொடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.